-
19th November 2011, 11:57 PM
#1
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர்களுக்கும் மெல்லிசை மன்னர்களின் ரசிகர்களுக்கும் ..
நமது சகோதர இணைய தளமும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களுக்கான அதிகார பூர்வமான இணைய தளமான www. msvtimes. com, தனது 5வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. இவ்விழாவில் 50 மற்றும் 60 களில் அவருடைய இசைக்குழுவில் ட்ராம்போன் வாசித்த திரு ரோஸாரியோ அவர்கள் கௌரவிக்கப் படுகிறார். இதற்கு முன் நடைபெற்ற ஆண்டு விழாவில் கிடார் இசைக் கலைஞர் திரு பிலிப்ஸ் அவர்கள் கௌரவிக்கப் பட்டார். இந்த இணைய தளத்தின் சார்பில் ஆண்டு தோறும் அவருடைய இசைக் குழுவில் பணியாற்றிய மூத்த இசைக் கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு எதிர் வரும் நவம்பர் 26 சனிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகில், சுந்தரேஸ்வரர் தெருவில் ஆர்.ஆர். சபா எதிரில் உள்ள லேடி சிவஸ்வாமி ஐயர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஆர்.கே.ஸ்வாமி அரங்கில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் பங்கேற்கிறார். அவர் இசையமைத்த பாடல்களில் அபூர்வமான சிலவற்றை சாவித்திரி ராகமாலிகா இசைக்குழுவினர் வழங்குகின்றனர்.
அனைவரும் வருக.
அன்புடன்
ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 21st November 2011 at 08:08 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th November 2011 11:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks