-
30th November 2010, 02:28 PM
#551
Senior Member
Senior Hubber
http://pitchaipathiram.blogspot.com/...g-post_30.html
இளையராஜா பின்னணி இசையை ஒரு பாத்திரமாக உபயோகிக்கும் உன்னதங்களைப் பற்றி நாம் நிறையவே அறிந்திருக்கிறோம். இதிலும் அந்த மாதிரியான தருணங்கள் பலவுண்டு. குறிப்பாக காவல் அதிகாரியிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் இளைஞனும் சிறுவனும் மலம் கழிக்கும் சாக்கில் ஓடுவதும் கான்ஸ்டபிள் அவர்களை புல்வெளியில் பின்செல்வதுமான காட்சியில் பின்னணியிசை உயர்ந்த தரத்துடன் அமைந்திருந்தது.
அடிபட்ட பள்ளி மாணவியின் காயத்தைப் பார்க்க இளைஞன் பாவாடையை விலக்கிப் பார்க்க இயல்பான தன்னுணர்வில் அவள் இளைஞனை அறைகிறாள். தொடர்ந்து அறைகளை வாங்கிக் கொண்டே காயத்தைப் பார்க்கும் இளைஞன் 'வலிக்குதாம்மா?' என்கிறான். அங்கே புறப்படும் ஒரு நரம்பு வாத்தியத்தின் இசை நிச்சயம் என் ஆன்மாவை தொட்டிருக்கக்கூடும். இயல்பாக மனம் கலங்கியது. என்னுடைய மனிதம் உயிர்த்தெழுந்த கணங்களில் ஒன்றாக அதைச் சொல்வேன்.
-
30th November 2010 02:28 PM
# ADS
Circuit advertisement
-
30th November 2010, 05:21 PM
#552
Senior Member
Senior Hubber
http://surveysan.blogspot.com/2010/11/blog-post_29.html
முதல் காட்சியில், பள்ளியின் வாசலில் இருக்கும் அகி(அகிலேஷ்) என்ற சிறுவன் நிற்கும் காட்சி. சில விநாடிகள் அவனை க்ளோஸ்-அப்பில் காட்டும் போது, இசை இல்லாத அமைதி. என்னடா ராசாவை காணுமேன்னு யோசிக்கரதுக்குள்ள, ராஜா அள்ளி வீசராறு இசைப் ப்ரவாகத்தை.
இருக்கையில் அப்படியே ஒய்யாரமா ஒக்காந்து, எதிர் சீட்டில் கால் போட்டு, இளையராஜாவின் இசை மழையில், மிச்சம் 2 1/2 மணி நேரமும் மிகவும் இனிமையாக அமைந்தது.
ஒவ்வொரு சீனுக்கும், வித விதமான இசை அமைப்பு. ஒரு பெரிய concertக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல்.
-
30th November 2010, 05:33 PM
#553
Senior Member
Senior Hubber
http://www.narsim.in/2010/11/blog-post_30.html
லாரி ஓட்டுனரிடம் அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு, நீதான எடுக்கச்சொன்ன என்று அழுதவுடன், வெறித்துப் பார்க்கும் ஓட்டுனரின் முகம், பின்னனியில் வயலின் என இளையராஜாவை தவிர்த்து இந்தப் படத்தைப் பார்த்தால், ஓவ்வொரு தாய்ப்பாத்திரங்களும் தாயாகத் தெரிந்திருப்பார்களா என்பது
ஐயமே..நன்றி ஐயனே
கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.
நன்றி இளையராஜா.
-
1st December 2010, 12:53 AM
#554
Senior Member
Platinum Hubber
shAji vakkAlaththu continues
அன்புள்ள் ஜெ,
நந்தலாலா பற்றி ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் ஷாஜி அதிலே இசை சரியில்லை, ராஜாவுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லியிருந்ததாக சாரு நிவேதிதா எழுதி வாசித்தேன். ஷாஜியைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சீரியஸாகவே யோசிக்க வேண்டும். அவருக்கு உங்களைப்போன்ற உயிர்நண்பரின் உதவி தேவைப்படுகிறது இப்போது. சாருவைப்பற்றி பயமில்லை. அது ஒரு சர்க்கஸ். ஒருவருடம் முன்பு இதே நந்தலாலாவை பார்த்துவிட்டு இளையராஜாவின் இசைமேதமையைப்பற்றி கண்ணீர்மல்க எழுதினார். கேட்டு அழுதேன் என்றார். இன்று அந்த இணைப்பையே எடுத்துவிட்டார். ஷாஜியை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல மனிதர் என்று நினைக்கிறேன்
நந்தகுமார், சென்னை
அன்புள்ள நந்தகுமார்
இந்த ஆட்டத்துக்கே நான் இல்லை. ஆளை விடுங்கள்.
ஷாஜி என்னிடம் இளையராஜாவின் பின்னணி இசை சர்வதேசத்தரம் கொண்டதாக, மனதை உலுக்குவதாக இருப்பதாகத்தான் சொன்னார். அதேசமயம் கடைசியில் பாடல் வருவதும், சில இடங்களில் இசை மேலே ஏறி ஒலிப்பதும் தனக்கு கொஞ்சம் மிகையாக தெரிவதாகச் சொன்னார்.
நான் அவருக்கு படத்தின் ஒலிக்கலவையின்போது இயக்குநர்தான் அதை முடிவுசெய்கிறார் என்று விளக்கினேன். பின்னணி இசை எந்த அளவுக்கு ஒலிக்கவேண்டும், எங்கே அமைதியாகவேண்டும், எங்கே ஒலிவிளைவுகள் மேலே எழ வேண்டும், எங்கே சூழல் ஒலிகள் கேட்கவேண்டும், எங்கே வசனம் ஒலிக்கவேண்டும் என்று இயக்குநரும் ஒலிநிபுணரும் சேர்ந்து தான் தீர்மானிக்கிறார்கள். பின்னணி இசை பல படிகள் முன்னரே அளிக்கப்பட்டுவிடும்.
ஷாஜி அதை தொலைக்காட்சியிலும் சொல்லியிருக்கிறார். அவர் எவரிடமும் மாற்றுக்கருத்து எதையும் சொல்லவில்லை என்றும், தவறான முறையில் தன் கூற்று கொடுக்கப்பட்டிருப்பதை விலக்கிக்கொள்ள கேட்டிருப்பதாகவும் சொன்னார்
ஜெ
-
1st December 2010, 08:55 AM
#555
Senior Member
Devoted Hubber
-
1st December 2010, 11:26 AM
#556
Senior Member
Devoted Hubber
யாரும் கவனிக்கவில்லையா?
இசையறிவு உள்ளவர்கள் இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமையை விளக்கலாம். இன்னும் தேவைப்பட்டால் சுரேஷின் இந்த இணைப்பில் உள்ள இசைத்துணுக்குகளையும் கூட ஒப்பீட்டுக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
1. கிகுஜிரோவின் இசையில் இன்ஸ்பையர் ஆகி இசையமைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா? (பியானோவுக்கு பதில் வயலின் போன்ற)
2. இரண்டிற்கும் சம்மந்தமே இல்லையா?
3. ஒரே மாதிரியான அப்ரோச். (மினிமலிஸ்டிக். பிட்சிங்)
-
1st December 2010, 11:34 AM
#557
Senior Member
Devoted Hubber
-
1st December 2010, 12:00 PM
#558
Senior Member
Platinum Hubber
suresh, outstanding writeup.
I hope whoever watches Nandhalala for the National Award committee next year, they are given a printed handout with Suresh's article.
Ofcourse, it is highly likely that a bombastic movie might get the BGM award, just as even when IR got it it had to be for pazhassi raja, with its scope for grandeur. But if the committee members can read this post, and understand the purpose and use of BGM, they'd be the better for it.
-
1st December 2010, 12:51 PM
#559
Senior Member
Diamond Hubber
Suresh,
Nice one.
There are easier terms in film vocabulary to delineate the nature of sound in films - Diegetic (whose source is within film's universe) and Non-diegetic (which includes background score, voice-over of unseen, unknown objective narrator, etc).
...an artist without an art.
-
1st December 2010, 02:05 PM
#560
Senior Member
Devoted Hubber
Plum - Thank you.
kid-glove - Oh! Thanks for that information. Will remember and use those words
Bookmarks