-
I watched the movie with my wife in bangalore today. Definitely a Good movie and for those who love "LOVE" would like the movie for sure.
My wife had watched VTV and as per her comparision, the slowness felt in VTV was not felt here because of intelligent use of music throughout the movie. If you are a IR fan, don't miss this movie.
I think GVM has used the songs to more than one hour of footage and i liked this Raja FAN in him and a treat to all IR fans
There is an extended interlude section for "vanam mella", Few lines from "pengal enraal" (pathos version) sung by raja, Original neethane pon vasantham sung by GVM with guitar notes and extended instrumental only of "Satru munbu" in the movie
-
excerpts of Mr. Mohan (?)
நீதானே
என் பொன்வசந்தம்!!!…
நீண்ட, நெடிய நிஜமான காதலின் முப்பரிமாணத்தை,
நீள, அகலங்கள் குறையாமல், திறம்பட திரையில் வடித்திருக்கிறார்கள் –
கௌதமும், இளையராஜாவும்!!!….
காதலும், இசையும் பிடித்துப்போனவர்களை,
ஒரு முறைக்கு இருமுறை திரையில் பார்க்கத்தூண்டுகிறது -
வசந்த காலத்தில் வந்திருக்கும் இந்த இசையருவி!!!….
டைட்டில் கார்டு போடுவதற்கு “ஸ்டுடியோ மேக்ஸா” இல்ல “மாயா”வா என்று
மண்டையைப் பிய்த்துக் கொள்ளாமல்,
”சரவுண்டு சவுண்டா” இல்ல “டால்பி சவுண்டா” என்று
சிண்டைப் பிடித்துக்கொள்ளாமல்,
ஆர்ப்பாட்டமின்றித் துவங்குகிறது இளையராஜாவின் வயலினும்,
இந்த நூற்றாண்டின் காதலும்!…
பால்யத்தில் சண்டையிட்டுப் பிரிந்த பள்ளித்தோழியை,
கல்லூரியின் கலைநிகழ்ச்சியில்கண்டு ஜீவா வழிவதும்,
”நீ தானே என் பொன்வசந்தம்!….” என்று ஜீவா பாடும்போது
சமந்தாவின் ரியாக்ஷனும், அடடா ஹேஹேய்ய்ய்ய்!!!!
இந்தப்பாடலை ஜீவா மேடையில் பாடும்போதும்,
கிடாரிஸ்ட் கார்டு பிடிக்கும்போதும்,
ஆயிரம் வோல்டேஜ் மின்னல் தெறிக்கிறது – சமந்தாவின் முகத்தில் மட்டுமல்ல,
கேட்கும் அனைவரின் உள்ளத்திலும்!!!
காலத்தைக் கடந்த இசையைமட்டுமல்ல,
கடந்த காலத்தையும் இசைப்பேன் என,
எப்போதும்போல இப்போதும் நிரூபித்திருக்கிறார் இசைஞானி!
”அடிக்கடி உன்னை பிரிந்து போகிறேன்,
மீண்டும் மீண்டும் உன்னைச் சந்திக்க!”
என்ற கவிதைதான் ஞாபகம் வருகிறது –
ஜீவாவும், சமந்தாவும் அடிக்கடி சண்டைபோட்டு பிரியும்போது!…
ஒவ்வொருவருக்கும் உள்ள புரிதலின் தேடல்,
இந்த இருவருக்கும் எதிராய் வினை புரிகிறது!
பிரிதலும், பிரிதல் நிமித்தமுமின்றி, பிரிதலும் சேர்தலுமான
காதலையும், காதல் சார்ந்த இடத்தையும்- குத்துப்பாட்டு, கத்திச்சண்டை ஏதுமின்றி
கிடாரும், க்ளாரினெட்டும், வயலினும், ட்ரம்ஸும் கொண்டு
அழகாகப் பதிவு செய்திருக்கிறார் கௌதம்!….
- மோகன் எஸ்
smohan.aix@gmail.com
-
Ananda Vikatan review for NEPV.. Just giving vikatan's review of Raja sir's music on the movie...
படத்தின் ஹீரோ, பலம்... இரண்டும் இளையராஜாதான். காதலர்கள் இணையும்போது வரும் காதல் கீதமாகட்டும், பிரியும்போது வரும் சோக கீதமாகட்டும்... ராஜா, ஏன் ராஜா என்பதை நிரூபிக்கிறார்.
-
-
http://www.vikatan.com/jv/2012/12/yi...mages/star.jpg'நீதானே என் பொன் வசந்தம்’ படத்துக்குக் கிடைத்த ஏடாகூட விமர் சனங்களைக் கண்டு நொந்துபோனார் கௌதம் வாசுதேவ் மேனன். 'தெலுங்குல படம் சூப்பராப் போகுது...’ என்று சமாளித்தவர் இப்போது, 'என்னோட அடுத்த படம் நிச்சயம் நல்ல படமா இருக்கும். நம்புங்க...’ என்று நாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
-From Junior vikatan.
-
NEPV Press meet. Raja sir explains the difficulties he faces while composing music in a very lighter way.. it is really funny when he mentioned about the telugu reel he got for bgm composing. He is pleased about the way songs are picturized by not going abroad or away from the actual story scenes.
http://www.youtube.com/watch?v=KenQLmQYZ_k
-
எப்போதும் போல மனம் திறந்து.. ஆனால் சிறப்பாய் வந்திருக்கிறது.. இதுவரை யாருமே இப்படி செய்ததில்லை என ராஜாவே பாராட்டிய கௌதமிற்கு நன்றிகள் பல.
-
IR awarded Sangeet Natak academy purskar for creative and experimentation category in music.. Finally folks have woken up..
I want Music Academy to wake up and honor this man.. who according to me is the greatest Indian musician of this century..
-
-
கோவை நிகழ்ச்சியில் ராஜாவின் பேச்சு... ஆரம்பத்திலிருந்தே இவரை எதுக்கு ஒரு கவிஞனின் அதுவும் வெகுஜன மக்களுக்கு தெரியாத ஒரு ஆக்கப் பூர்வமான கவிஞரின் விருது வாங்கும் விழாவிற்கு அழைக்கிறார்கள்? இது ஒருவகையில் திருவாசகம் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ரஜினி, கமல் நட்சத்திரங்களை அழைத்தது போல, ஜெயமோகன் ராஜாவை அழைத்து தனது இருப்பிடத்தை பல வெகுஜன மக்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்ட நினைக்கிறார் என நினைத்தேன். எதிர்பார்த்தது போலவே ராஜா ஏமாற்றவில்லை. ரஜினி எப்படி திருவாசகம் விழாவிற்கு வந்து எதோ வந்ததிற்கு பேசிவிட்டு செல்வோம் எனப் பேசிவிட்டு சென்றதுபோல, இதில் ராஜாவும். ராஜாவை குறைசொல்ல முடியாது.. அவரைக் கூப்பிடுறவங்களை சொல்லணும்.