good luck in studiesQuote:
Originally Posted by viraajan
keep in touch
keep writing
thanks
Printable View
good luck in studiesQuote:
Originally Posted by viraajan
keep in touch
keep writing
thanks
Quote:
Originally Posted by Shakthiprabha
கை கொடுத்து உதவியமைக்கு நன்றி
:clap:Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
அரிச்சந்திரன் வாழ்க்கை .....Quote:
Originally Posted by Shakthiprabha
முற்றும் துறநத புத்தர்கூட முனிவராக ஆசைப் பட்டார்Quote:
Originally Posted by Shakthiprabha
May 18, 2009
[html:dc9250ae57] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13569992&vid=5119103&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8994/85907170.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13569992&vid=5119103&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8994/85907170.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:dc9250ae57]
Thanks aana. :bow:Quote:
Originally Posted by aanaa
Quote:
Originally Posted by aanaa
புரியவில்லை ஆனா. I think uve quoted something else whilst u need to have quoted some other thing :)Quote:
Originally Posted by aanaa
May 20th
________
சுப்பு மனமார கிரி-ஜெயந்தி திருமணத்தை செய்யவிருப்பதாய் செல்லமாளிடம் பகிர்ந்து கொள்கிறாள். மனம் விசித்திரமானது. ஜாதியும் மதமும் இனமும் மொழியும் என பல்வேறு பேதங்களால் குறுகிவிட்ட நமக்கு, மனம் இசைந்து விட்டால், மனம் விஸ்தாரம் அடைந்து, நன்றியால், இறையுணர்வால், அன்பால், காதலால், மனித நேயத்தால் கட்டுண்டால், அங்கு வித்தியாசங்களும் பேதங்களும் பறந்தோடிவிடுகின்றன.
வசுமதியின் வார்த்தைகளால் உமா மிகுந்த மனவருத்ததிற்கும் கோபத்திற்கும் ஆளாகி துக்கம் தாளாமல் அழுகிறாள். அஷோக் உமா வீட்டிற்கு அடிக்கடி வராததை உணர்ந்து அதன் காரணமும் கண்டறிகிறான். அன்பை பொழிய பலவகையில் ஜீவன்கள் பிரயத்தனப்படுகின்றது. அவரவர்க்கு தெரிந்த விதத்தில் அவரவர்கள் பிறரிடம் அன்பு செலுத்துகின்றனர். அன்பு என்பதை செலுத்த விடாமல் செய்ய எந்த உயிர்க்கும் உரிமை இல்லை
என்கிறான். அவன் தாய் வீணே பயம் கொள்கிறாள் என்றும் எல்லாமே பரப்பிரம்மத்தினின்று தோன்றியவையே என்கிறான். அதை புரிந்து கொள்ள அங்கு யாருக்கும் சாத்தியப்படவில்லை.
பரப்பிரம்மம் என்ற அந்த வஸ்து ஒன்றே முழுமையானது என்று பல வேத வியாக்கியானங்களில் கேட்டிருக்கிறோம். அந்த வஸ்துவை எவன் ஒருவன் அறிந்தவனாக நினைக்கிறானோ அவன் அறிந்தானல்லன். எவன் ஒருவன் அறியாதவன் என்று நினைக்கிறானோ அவன் அறியாதவனும் அல்லன். எவன் ஒருவன் அதை அறிந்தும் அறியாததுமாக உணர்கிறானோ அவனே அதை சரியாய் புரிந்து கொண்டவன் ஆகிறான். இந்த பரப்பிரம்மத்திலிருந்தே இறைவனும், மானிடரும், ஜடமும், பொருட்களும், மற்ற எல்லாமும் தோன்றியது.
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என்கிறான் அஷோக். பரப்பிரம்மத்திலிருந்தே நாம் அனைவரும் தோன்றியுள்ளோம். அதுவே முழுமை. நாம் ஒன்றெனக் கலக்கும் போதும் பரப்பிரம்மத்தில் கலக்கின்றோம். அதனின்று எடுத்தாலும் அது குறைவதில்லை. அதனிலேயே போய் முடிந்தாலும் அது அதிகமாவது இல்லை. ஆதி-அந்தம், அளவு, காலம் என்ற வரையரைக்கு அப்பாற்பட்டது அது.
ஈசாவாஸ்ய உபநிஷதத்தில் பிரம்மத்தின் ஸ்வரூபத்தை பற்றிய விளக்கங்கள் சில இடங்களில் வருகிறது. இதைத் தவிர இன்ன பல நூல்களும் இதனை சற்றே விளக்க முற்பட்டிருக்கின்றன. சற்றே என்று சொல்வதன் காரணம் பிரம்மம் என்பது விளக்க முடியாத ஒன்று. பரப்பிரம்மத்தை எல்லைகளுக்கு உட்பட்டு மொழிகளால் கட்டுண்டு விளக்க ஏதுவாகாதது. உணர்வினாலும் கூட கட்டுக்குள் கொணர்ந்திட முடியாதது.
பிரம்மமே வித்யை அதுவே அவித்யை, பிரம்மம்மே சத்தியம் அத்வே மாயை. பிரம்மமே உலகம் அதுவே ஆன்மா. எல்லாமாகவும் உள்ளது, எல்லாவற்றிலும் உள்ளது. எதனின் உள்ளும் உள்ளது. எதனின் புறமும் கூட அதுவே ஆகிறது.
Poornamadah Poornamidam
Poornaath Poornam Udachyathe
Poornasya Poornamaadaaya
Poornameva Vasishyathe.
ஓம் பூரணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ணம் உதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவா வசிஷ்யதே
அங்கே இருப்பது பூர்ணம். இங்கேயும் பூர்ணமே. பூர்ணத்திலிருந்து பூரணம் உண்டாகியது. பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை பிரித்தால், எடுத்தால், மிஞ்சி இருப்பதும் பூர்ணம்.
(வளரும்)
should be thisQuote:
May 19th
_______
*மனம் புண்படக்கூடாது என பொய் பேசுவது சரியில்லை* என்றால்....
'பொய்மையும் வாய்மை இடத்தே
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்' - என்ற குறள் தர்மத்திற்கு புறம்பானதா?
(வளரும்)