-
20th May 2009, 06:27 PM
#1
Senior Member
Platinum Hubber
May 19th
_______
எழுத முக்கியத்துவம் வாய்ந்த அளவு இன்றைய பகுதியில் ஒன்றும் இல்லை.
ஜெயந்தியின் அம்மா சுப்பு, கிரியின் தாத்தா வீட்டிற்கு மிகவும் கடமைப்பட்டவர்களாய் வளர்ந்திருந்தது தெரிய வந்ததும், நெகிழ்ந்து போகும் சுப்பு, ஜெயந்தியை கிரிக்கே திருமணம் செய்துவிக்க மனமார ஒப்புக்கொள்கிறாள். வசுமதி, தனக்கு உமாவின் வருகையும், அவள் அஷோக்கிடம் காட்டும் ஈடுபாடும் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை உமாவிடமே வெளிப்படையாய் தெரிவிக்கிறாள். இதையறிந்து உமா மௌனமாக வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள்.
'ஆயிரம்-பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம்' என்பது உலகாய பழமொழி. ('ஆயிரம் முறை போய் சொல்லி' என்ற மாற்றுக் கருத்தும் உபதேசமும் நிறைய கேட்டாகி விட்டது ) சத்தியமே சிறந்தது. சத்தியத்தை பேசுவதே உத்தமம். சத்தியத்தையும் இதமாக, மனம் புண்படாமல் பேச வேண்டும். மனம் புண்படக்கூடாது என பொய் பேசுவது சரியில்லை என ஹிதோபதேசத்திலும், ஹிந்து தர்மத்திலும் குறிப்பிட்டிருப்பதை சோ நினைவு கூர்ந்தார்.
*மனம் புண்படக்கூடாது என பொய் பேசுவது சரியில்லை* என்றால்....
'பொய்மையும் வாய்மை இடத்தே
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்' - என்ற குறள் தர்மத்திற்கு புறம்பானதா?
(வளரும்)
-
20th May 2009 06:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks