-
14th July 2010, 07:30 PM
#1
Administrator
Platinum Hubber
vinatha and RAGHAVENDRA, please continue.
Originally Posted by
s ramaswamy
But was also sad to see the lack of response for the issue raised.
As I am often fond of saying, the younger generation just needs exposure. We need knowledgeable people to discuss the wonderful songs of that era. Instead of cursing the darkness, lets provide the light.
p/s: my son can whistle for complete songs of the 60s era (my fav era) while all my teen children love NT movies.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th July 2010 07:30 PM
# ADS
Circuit advertisement
-
14th July 2010, 08:53 PM
#2
Senior Member
Seasoned Hubber
டியர் நவ் சார்,
நன்றிகள் பல. தாங்கள் சொன்னது போல நல்லவை தலைமுறைகளைக் கடந்து நிற்கும். நம்முடைய கடமை அவற்றை அடையாளம் காட்டுவதே யாகும்.
என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் பழைய பாடல்களில், குறிப்பாக தாங்கள் குறிப்பிட்டுள்ள கால கட்டத்தில் எண்ணற்ற இனிமையான பாடல் அதிகம் அறியப் படாமல் இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்வதே நம்முடைய பங்கிற்கு சிறப்பீனும் என எண்ணுகிறேன்.
அந்த அடிப்படையில் அடுத்து ஒரு இனிமையான பாடல்
பாடலின் இறுதியில் சற்று நீண்ட வாத்திய இசை ஒலிப்பது சிறப்பம்சம்.
படம் - விஜயபுரி வீரன்
பாடல் - ஆளைப் பாரு கண்ணாலே
http://www.jointscene.com/php/play.p...gid_list=22149
பாடியவர் - பி.சுசீலா
இசை - டி.ஆர்.பாப்பா
தயாரிப்பு - சிட்டாடல்
இயக்கம் - ஜோசப் தளியத்
கதை - ஏ.சி. திருலோக்சந்தர்
நடிக நடிகையர்
சி.எல்.ஆநந்தன், அசோகன், பாண்டி செல்வராசு, எஸ்.வி.ராமதாசு, சந்திரகாந்தா, மற்றும் பலர்
வெளியான நாள் - பிப்ரவரி 2, 1960
அன்புடன்
ராகவேநதிரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd April 2011, 11:55 AM
#3
Member
Junior Hubber
Thaayillaap pilllai video clip
அன்புள்ள tfm lover அவர்களுக்கு
இந்த தூத்துக்குடி பேராசிரியர் எஸ். எஸ்.கந்தசாமியின் காலை வணக்கம் .
நீங்கள் நல்கிய தாயில்லாப் பிள்ளை படப் பாடலின் வீடியோக் கிளிப்புக்கு நன்றி !
இதனை என்னுடைய நண்பர்களுக்கு வழங்குவதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறேன் .
இந்தப் பாடல்
'' படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா ''
எனது மலரும் நினைவுகளைக் கிளறி விட்டது .
நீங்கள் கிண்டல் செய்தது போல் எந்தப் பெண்ணும் இது வரை என்னிடம் புதிய பாடம் படிக்க வந்தது இல்லை,!
இந்தப் படத்தில் ஒரு பிராமணப் பிள்ளை சேரியில் வளரும் , ஒரு சேரிப் பிள்ளை அக்கிரகாரத்தில் வளரும் .
ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம் !
உங்களுக்காக a. நாகேஸ்வரராவ்,அஞ்சலி தேவி நடித்த
கலை வாணன்
படத்தில் இருந்து இரண்டு பாடல்களின் ஒளிப் பதிவுகளை படத்தில் இருந்து வெட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறேன் .
ரொம்ப நாளைக்கு பிறகு இந்த forum hub க்கு வந்திருக்கிறேன் .
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
4th April 2011, 01:35 AM
#4
Senior Member
Seasoned Hubber
Last edited by tfmlover; 4th April 2011 at 10:11 AM.
-
4th April 2011, 05:00 AM
#5
Member
Junior Hubber
Kalai vaanan songs video clips
Originally Posted by
tfmlover
அன்புள்ள புரபொஸர்
youtubeபில் upload பண்ணியிருக்கேன்
யார் வேனுன்னாலும் பார்க்கலாம் ரஸிக்கலாம்
download பண்ணிக்கலாம்
என் அனுமதி எதுக்கு
தாயில்லாப் பிள்ளை அருமையான கதை நடிப்பு பாடல்கள்
எம் வி ராஜம்மாவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை
திரைப் படங்களின் தாயிற் சிறந்த தாய்
சின்ன சின்ன ஊரணியாம் என்று பாட்டு கூட வரும்
படம் நல்லாவே ஓடித்தாம்
கலைவாணன் என்னிடம் இருக்கிறார்
ஆனாலும் பாட்டு எல்லாம் தண்டவாளத்தில் ஓடுகின்றன*
மாலை நேரத்திலே யமுனா
தீரத்திலே , ஆடும் மயில் நீ வா கொஞ்சம் பர்வாலே குவாலிட்டி
அதான் கேட்டேன்
உங்கள் அன்புக்கு நன்றி
வந்து விட்டு மறுபடியும் காணாமல் போகக் கூடாது
இங்கு வழக்கமாகிப் போன
'மறைந்திருந்து பார்க்கும் மர்மமும்' கூடாது
பாருங்கள் ! உங்கள் போஸ்டை பார்த்து விட்டு சிவாஜி சார் தரிசனம் தந்து விட்டார்
ராமசாமி தொடர்ந்து செல்ல அவரை சிவாஜி தொடர்ந்ததென்ன ?
மை வடிக்காத ஃபாரமில் மெய்
வடிக்க
நன்றி
அன்புள்ள TFM LOVER அவர்களுக்கு
எனது அதிகாலை வணக்கம் .
உங்களுக்கு கலை வாணன் படத்தில் இருந்து இரண்டு பாடல்களை MEDIA FIRE மூலம் வழங்குகிறேன் .
அவைகளை நீங்கள் YOU TUBE ல் UPLOAD பண்ணி விடுங்கள் . எல்லோருக்கும் அவைகள் பயன் படட்டும்
'' மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே '' - P.சுசீலா, கண்டசாலா - கலை வாணன்
http://www.mediafire.com/?ud73a84ty4yzwp8
'' தர்மசீலா கலைவாணருக்குள்ளே நானும் ஒருவன் அன்றோ '' - சீர்காழி கோவிந்தராஜன் - கலை வாணன்
http://www.mediafire.com/?o3wtv21xd0kh23j
தாயில்லாப் பிள்ளை படத்தில்
சூலமங்கலம் பாடிய
'' சின்னச் சின்ன ஊரணியாம் ''
A.L.ராகவன் பாடிய
'' கடவுளும் நானும் ஒரு ஜாதி ''
ஆகிய இரண்டு பாடல்களின் ஒளிப் பதிவுகளை
தயை கூர்ந்து வழங்க வேண்டுகிறேன் . .
அவைகளைப் பார்த்துப் பல காலம் ஆகி விட்டது !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
15th July 2010, 11:42 AM
#6
Senior Member
Veteran Hubber
பட்டுக்கோட்டையாரின் வரிகள் with Srilankan music style orchestration (remember சுராங்கனி சுராங்கனி....)
துடிக்கும் வாலிபமே நொடிக்குள் போய்விடுமே......
மர்ம வீரன்.....பாலசரஸ்வதி தேவி.R
http://www.raaga.com/player4/?id=154...17252306858845
வினதா.
-
15th July 2010, 12:17 PM
#7
Senior Member
Veteran Hubber
Prelude piano stroke and Susheela's humming, flute call is relaxing.
One of my favorite early Susheela solo.
SWEET lyrics.
பட்டுக்கோட்டையாரின் காதல் வரிகள்....celebratory Shenoy fill-ins.
SIMPLICITY is a VIRTUE!
http://www.raaga.com/player4/?id=154...04545534166262
இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
அதை இரவே , உன்னிடம் சொல்ல வந்தேன்
நான் இன்ப முகம் ஒன்று கண்டேன் ...
ஓஓஓஓஒ ....
தேடாமல் அலையாமல் நேரிலே சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே
தேடாமல் அலையாமல் நேரிலே சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே
மனம் ஆனந்தம் பாடுவதேனோ
இது ஆரம்ப ஜாடைகள் தானோ
இன்று இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே , உன்னிடம் சொல்ல வந்தேன்
நான் இன்ப முகம் ஒன்று கண்டேன் .....
ஓஓஓ... .........
தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே .....
கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே .....
தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே ....
கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே ....
அது ஏனென்று கேட்கவும் ஓடுதே ...
புது நாணம் வந்தே தடை போடுதே ...
பொங்கும் இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் ....
அதை இரவே , உன்னிடம் சொல்ல வந்தேன்
நான் இன்ப முகம் ஒன்று கண்டேன் ....
PURE JOY!
Vinatha.
-
15th July 2010, 05:27 PM
#8
Senior Member
Regular Hubber
வினதா
துடிக்கும் வாலிபமெ பின்னனி இசை "பம்பர கன்னாலெ" என்ட்ர சன்திரபாபு பாடலின் மருபதிப்பு. துடிக்கும் முதலில் வந்தது என நினைக்கிரென்.
-
15th July 2010, 07:12 PM
#9
Senior Member
Seasoned Hubber
விநதா அவர்களுக்கு மிக்க நன்றி. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் இதை மீண்டும் கேட்கும் வாய்ப்பளித்தமைக்கு.
சில இடங்களில் இப்பாடல் தங்கபதுமை பாடலான என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் பாடலை நினைவூட்டும்.
அதே போல் மர்ம வீரன் பாடலை சமீபத்தில் பாலசரஸ்வதி தேவி அவர்கள் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார்.
வாய்ப்புக்கு நன்றி
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th July 2010, 07:21 PM
#10
Senior Member
Seasoned Hubber
தொடரும் பாடல்
டி.ஆர். மகாலிங்கம் அவர்கள் பாடிய உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் ஆட வந்த தெய்வம் படத்தில் இடம் பெற்ற கோடி கோடி இன்பம் பெறவே என்ற பாடலாகும். பாடலாசிரியர் மருத காசி.
http://www.raaga.com/player4/?id=154...21156546473503
வெளியான நாள் - ஏப்ரல், 1960
தயாரிப்பு - மெஜஸ்டிக் பிக்சர்ஸ்
இயக்கம் - ப.நீலகண்டன்
கதை - எல்லார்வீ
நடிக நடிகையர்
டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஆர்.ராதா, ஏ.கருணாநிதி, ராமராவ், கே.டி.சந்தானம், ஈ.வி.சரோஜா, ராகினி, அஞ்சலிதேவி, லட்சுமிபிரபா, மனோரமா, மற்றும் பலர்
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks