பாடல்: இதய வாசல் திறந்த போது
திரைப்படம்: தூங்காத கண்ணின்று ஒன்று
இசை: K.v.மகாதேவன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது
மலர் மீதிலே பனி சிந்துதே
மனம் என்னும் தேனாற்றில் அலைமோதுதே
இன்று இதய வாசல் ஹா திறந்த போது ம்ம் உறவு வந்தது

மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே

மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே

மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே

வானத்து வில்லாலே பாலம்
மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்
வானத்து வில்லாலே பாலம்
மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்

நிலவென்னும் பெண்தோழி விண்மீனை பூவாக்கி
வழிமீது தெளிப்பாளோ அங்கே அங்கே

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது

விழிகள் பொழியும் கவிதை மழையில்
மனதில் மலரும் சங்கீதமே
இளமை கரையில் இவளின் மடியில்
கதைகள் தினமும் உருவாகுமே

விழிகள் பொழியும் கவிதை மழையில்
மனதில் மலரும் சங்கீதமே
இளமை கரையில் இவளின் மடியில்
கதைகள் தினமும் உருவாகுமே

எழிலான உன் கூந்தல் ஓரம்
நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்
எழிலான உன் கூந்தல் ஓரம்
நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்

முப்பாலில் மூன்றாம் பால் இப்போது நீதானே
எப்போது படித்தாலும் இன்பம் இன்பம்

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது
மலர் மீதிலே பனி சிந்துதே
மனம் என்னும் தேனாற்றில் அலைமோதுதே
இன்று இதய வாசல் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ம்ம்