-
13th May 2009, 11:21 AM
#11
Senior Member
Platinum Hubber
Originally Posted by
viraajan
Also, I request you to write about the "madisaar, priya's good news, saasthirigal meeting" scenes.
I don't know how to write about madisaar, conceive matter
not getting the right words
பிரியா தான் கருவுற்றிருப்பதை தன் மாமியாரிடம் மகிழ்வுடன் முதலில் பகிர்ந்து கொள்கிறாள். ஜாதி கட்டான மடிசார் கட்டிக்கொண்டு கோவிலுக்கு போக ஆவல் இருப்பதாக தெரிவிக்கிறாள். மனமெல்லாம் வெள்ளையாக சாம்புவின் மனைவி செல்லம்மாள் பேசுவதைக் கேட்க நன்றாக இருக்கிறது.
நேற்று எழுத விட்டுப்போன சில விஷயங்கள்
_______________________________________
"மாதங்களில் நான் மார்கழி" என்று கண்ணன் கூறுகிறான். தன்னை (இறையம்சத்தை) இருப்பவற்றுள் சிறந்தது எதுவோ அதுவாக கற்பித்துக்கொள்கிறான். அப்படி மார்கழி மாதத்தில் என்ன சிறப்பு?
இறைவனுக்கு உகந்த மாதம். தேவர்களுக்கு பிரியமான மாதம். சிறிதே நேரம் இறைவனை துதித்தாலும் பெரும் பேறு வந்துயர்த்தும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில், இறைவழிபாட்டில் ஈடுபட வைக்க ஒரே வழி தான் உண்டு. சிறந்த மாதமான மார்கழியை இறைவனுக்கு அர்பணித்து அவன் துதி பாடுதலே அவ்வழி. அதற்கு நம் சொந்த விஷயங்கள், சௌகரியங்கள், நற்காரியங்களை எல்லாம் சற்றே தள்ளிப்போட்டு மற்ற
பதினோரு மாதங்களில் செய்துக்கொள்ளலாமே என்பதால் தான் மார்கழி மாதங்களில் நம் வீட்டு நற்காரியங்களை செய்யாமல் இறைவனின் துதியில் ஈடுபடச் செய்கிறார்கள்.
சோவின் இந்த விளக்கம் ஒப்புமைக்குறியதாக இருந்தது quite logical !
நாம் கேள்விபட்ட ஒன்று தான், "இருப்பதை வைத்து இன்புறு" எனும் தத்துவம். என்னிடம் என்ன இல்லை என்று நினைத்து துன்பத்தில் துவண்டால் ஒவ்வொரு தனிப்பட்ட ஜீவனுக்கும் துக்கம் சொல்லி மாளாது. இன்பமும் துன்பமும் மனத்தின் வெளிப்பாடே. நம்மிலிருந்து புறப்படும் உணர்வுகள். அந்த மனதை ஷாந்தமாக வைத்துக்கொண்டால், சுற்றுப்புற சூழலினால் வரும் இன்பம்/துன்பம் நம்மை அதிக அளவு பாதிக்காது.
ஆங்கிலத்தில் "count your blessings" என்று கூறுவார்கள். இத்தத்துவத்தை சுட்டிக்காட்டி சாம்பு பேசுகிறார். "குறைப்பட்டுக்கொள்ளாத மனிதன் ஏது! " இருந்தாலும் குறை இல்லாவிட்டாலும் குறை. எது இருந்தால் குறை? நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியாமல் வருந்துவதே பெரிய குறை. நாம் சுகப்பட உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவே. "கூன் குருடு பேடு நீங்கி பிறத்தல் அரிது" என்ற பாடல் வரிகள் அழுத்தமாய் பதிந்த வரிகள். , கூன் குருடு பேடு நீங்கி இறைவன் அளித்திருக்கும் இந்த உடல் எத்தனை காரியங்களை செய்ய வல்லது! அதை அளித்த இறைவனை வணங்க வேண்டும். உண்ண உணவும், இருக்க இடமும், அன்பு கொண்ட உறவுகளும், நதியும், மலையும், நீரும், காற்றும், மலர்களும், மரங்களும், எத்தனை ஆனந்தங்கள்! எத்தனை அழகு! அற்புதங்கள்! எப்பேற்பட்ட கருணை வள்ளல் அவன்! இந்த எண்ணத்துடன் பல மஹான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அனுபவித்து இறைவனின் கொடை உள்ளத்தை துதித்து பாடல் பாடியிருக்கிறார்கள்.
அசுர வேகத்துடன் செயல்படும் இவ்வுலகில் இன்றைக்கு நான் இதையெல்லாம் ரசித்து பார்க்கும் நிலையில் இல்லை. நேரம் போதவில்லை. நேரம் இருப்பினும், மனம் இருப்பதில்லை.
நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே!!
நம் வாழ்வில் நிறைந்திருக்கும் அழகை ரசிக்கவும், நிறைகளை அளக்கவும் நேரம் போதாமற் இருக்கும் போது குறைகளை நினைக்க நேரமேது?!
(வளரும்)
-
13th May 2009 11:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks