-
26th July 2016, 11:03 AM
#1
Junior Member
Newbie Hubber
I agree with total degradation in standard of music in todays movies be it a song or RR. We miss Viswanathan-Ramamoorthy,K.V.Mahadevan, A.R.Rahman and Ilayaraja very badly. It is a fact that Ilayaraja himself lost his own class since 1991. We should agree the creativity life span is limited for MDs ranging from 12-16 years.
M.S.Viswanathan -T.K.Ramamoorthy- 1952 to 1965.
M.S.Viswanathan- 1966 to1969.
K.V.Mahadevan- 1957- 1976.
Ilayaraja- 1976 to 1991.
A.R.Rahman- 1992 to 2008.
But it is a pity that chain of genius emerge and hand battons regularly. Today, no creative genius with inherent talent emerge and career minded assembly music mediocres rule the roost.
-
26th July 2016 11:03 AM
# ADS
Circuit advertisement
-
28th July 2016, 09:01 AM
#2
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
I agree with total degradation in standard of music in todays movies be it a song or RR. We miss Viswanathan-Ramamoorthy,K.V.Mahadevan, A.R.Rahman and Ilayaraja very badly. It is a fact that Ilayaraja himself lost his own class since 1991. We should agree the creativity life span is limited for MDs ranging from 12-16 years.
M.S.Viswanathan -T.K.Ramamoorthy- 1952 to 1965.
M.S.Viswanathan- 1966 to1969.
K.V.Mahadevan- 1957- 1976.
Ilayaraja- 1976 to 1991.
A.R.Rahman- 1992 to 2008.
But it is a pity that chain of genius emerge and hand battons regularly. Today, no creative genius with inherent talent emerge and career minded assembly music mediocres rule the roost.
அய்யா! ஆ ஊன்னா இங்க வந்து ராஜாவின் வீச்சை குறைத்து மதிப்பிட்டு தங்களின் அதிமேதாவித்தனத்தை காட்டிட்டு போறிங்களே!
யாரு சொன்னா உங்ககிட்ட 1991க்கு அப்புறம் ராஜாவின் படைப்புத்திறன் மங்கிவிட்டதென! ஒருவேளை 1991-க்கு அப்புறம் உங்களது கேட்கும் திறன் மங்கிவிட்டதா என சந்தேகம் வலுக்கிறது.
----------
1992 - மன்னன், செம்பருத்தி, இது நம்ம பூமி , சின்னவர், திருமதி பழனிச்சாமி, சின்னத்தாயி, சிங்காரவேலன், சின்னக்கவுண்டர், பரதன், ஆவாரம் பூ, தேவர் மகன், நாடோடித் தென்றல், உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன், மீரா, தெய்வவாக்கு
1993
ஆத்மா, தாலாட்டு, கோவில்காளை, அரண்மனைக்கிளி, எஜமான், கிளிப்பேச்சு கேட்கவா, கலைஞன், மறுபடியும், பொன்னுமணி, பொன்விலங்கு, வள்ளி, வால்டர் வெற்றிவேல், உத்தமராசா, சின்ன மாப்பிள்ளை, ஐ லவ் இந்தியா, சக்கரை தேவன், உள்ளே வெளியே
1994
மகாநதி, மகளிர் மட்டும், சேதுபதி ஐபிஎஸ், செவ்வந்தி, ராஜகுமாரன், வீரா, ராசாமகன், ப்ரியங்கா, வீட்ல விஷேஷங்க, வியட்நாம் காலனி, புதுப்பட்டி பொன்னுத்தாயி
------------
இந்த மூன்று வருடங்களிலேயே சிலபல படங்களை நான் தவற விட்டிருக்கலாம். நேரம் கிடைக்கையில் தொடர்ச்சியாக 2016 வரையிலான ராஜாவின் தொடர் வீச்சினை பதிவு செய்து, ராஜாவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அடைக்க முற்படும் எல்லா விமர்சகர்களின் போலி முகங்களை அகற்றுவேன்..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th July 2016, 04:51 AM
#3
Junior Member
Regular Hubber
இந்த மூன்று வருடங்களிலேயே சிலபல படங்களை நான் தவற விட்டிருக்கலாம். நேரம் கிடைக்கையில் தொடர்ச்சியாக 2016 வரையிலான ராஜாவின் தொடர் வீச்சினை பதிவு செய்து, ராஜாவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அடைக்க முற்படும் எல்லா விமர்சகர்களின் போலி முகங்களை அகற்றுவேன்..
போலி முகங்களை அகற்றுவீர்களா? அதற்கெல்லாம் அவசியமில்லை. ராஜாவின் சமீபத்திய "தாரை தப்பட்டை" வரை ரசித்துக் கேட்பவர்கள்தான் நாங்களும். அதற்கு பிறகு வந்த "ஒரு மெல்லிய கோடு", "அப்பா", "அம்மா கணக்கு" பாடல்கள் எல்லாம் சுமார் தான். "அம்மா கணக்கு" பின்னணி இசை நன்றாக இருந்தது. "குற்றமே தண்டனை" படத்தின் முன்னோட்டத்தில் வரும் பின்னணி இசை படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. மற்ற இசையமைப்பாளர்களையும் ரசிப்பதால் எங்களுக்கு போலி முகங்கள் என்று அர்த்தமில்லை. நாங்களும் ராஜாவின் இசையை விரும்பி கேட்பவர்கள்தான் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்லை.
கோபால் அவர்கள் கூறியதில், குறிப்பாக படைப்புத்திறன் பற்றி, எனக்கு உடன்பாடு இல்லை என்பது வேறு விஷயம். அவரை பொறுத்த வரை அது உண்மை. ஆனால் அந்த கருத்து கொண்டவர்களை போலிகள் என்றும், அவர்கள் முகத்திரையை கிழிப்பேன் என்றும் பேசுவது சிறுபிள்ளைத்தனம்.
-
29th July 2016, 07:25 AM
#4
Senior Member
Diamond Hubber
ராஜகுமாரன் படத்திலிருந்து..
சின்னச் சின்ன சொல்லெடுத்து
பொட்டுவச்சதாரு யாரு
Last edited by venkkiram; 29th July 2016 at 07:28 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th July 2016, 07:42 AM
#5
Senior Member
Diamond Hubber
வியட்நாம் காலனி படத்தில்
பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கைவீணையை ஏந்தும்
மார்கழி மாசம்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
30th July 2016, 12:31 AM
#6
Junior Member
Regular Hubber
ஒப்புக் கொள்கிறேன். "கைவீணையை ஏந்தும் கலைவாணி" பாடல் "வியட்னாம் காலனி" படத்தில் வந்தது என்பதை மறந்து விட்டேன். அற்புதமான பாடல்தான். "மார்கழி மாசம்" பாடல் நினைவுள்ளது. நல்ல பாடல்தான். ஆனால் இது போல் பல பாடல்கள் வந்து விட்டன. ராஜாவின் முத்திரை இந்த பாடலில் ஆழமாக இல்லை என்பது எனது கருத்து. என்னை பொறுத்தவரை ராஜாவின் 1991க்கு முந்தைய பாடல்களின் தரத்தில் இல்லை என்பது எனது கருத்து. இதனால் எனது ரசனை தரம் தாழ்ந்தது என்று நினைத்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
ராஜாவின் படைப்புத்திறன் 1991க்கு பிறகு குறைந்தது என்ற கருத்தை நானும் தான் ஏற்கவில்லை என்பதை மறுபடி நினைவு கூறுகிறேன். ஆனால் நீங்கள் கூறிய மற்ற பாடல்கள், "சாத்து நட சாத்து" உட்பட, நினைவில் உள்ளனவே தவிர ராஜாவின் திறமையை பறை சாற்றும் பாடல்கள் என்று நான் கருதவில்லை. கோபால் அவர்களின் கருத்தில் நான் எடுத்துக் கொண்டது இதுதான். ராஜா யார் என்று பின் வரும் சந்ததியினருக்கு விரைவாக எடுத்துரைக்க வேண்டும் என்றால், 1991க்கு முந்தைய அவரது படைப்புகளே வெகுவாக எடுத்துக்காட்டப்படும்.
-
30th July 2016, 02:38 AM
#7
Senior Member
Diamond Hubber
Originally Posted by
thozhar
ஒப்புக் கொள்கிறேன். "கைவீணையை ஏந்தும் கலைவாணி" பாடல் "வியட்னாம் காலனி" படத்தில் வந்தது என்பதை மறந்து விட்டேன். அற்புதமான பாடல்தான். "மார்கழி மாசம்" பாடல் நினைவுள்ளது. நல்ல பாடல்தான். ஆனால் இது போல் பல பாடல்கள் வந்து விட்டன. ராஜாவின் முத்திரை இந்த பாடலில் ஆழமாக இல்லை என்பது எனது கருத்து. என்னை பொறுத்தவரை ராஜாவின் 1991க்கு முந்தைய பாடல்களின் தரத்தில் இல்லை என்பது எனது கருத்து. இதனால் எனது ரசனை தரம் தாழ்ந்தது என்று நினைத்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
ராஜாவின் படைப்புத்திறன் 1991க்கு பிறகு குறைந்தது என்ற கருத்தை நானும் தான் ஏற்கவில்லை என்பதை மறுபடி நினைவு கூறுகிறேன். ஆனால் நீங்கள் கூறிய மற்ற பாடல்கள், "சாத்து நட சாத்து" உட்பட, நினைவில் உள்ளனவே தவிர ராஜாவின் திறமையை பறை சாற்றும் பாடல்கள் என்று நான் கருதவில்லை. கோபால் அவர்களின் கருத்தில் நான் எடுத்துக் கொண்டது இதுதான். ராஜா யார் என்று பின் வரும் சந்ததியினருக்கு விரைவாக எடுத்துரைக்க வேண்டும் என்றால், 1991க்கு முந்தைய அவரது படைப்புகளே வெகுவாக எடுத்துக்காட்டப்படும்.
மறுபடியும் மொதலேர்ந்தா? யாருங்க 91 என்பதை மைல்கல்லாக வச்சது? யாருங்கிறேன்?
முந்தையப் பதிவுகளில் 92, 93, 94, 95 ஆண்டுகளில் வெளிவந்த படங்களை தேர்வு செய்துள்ளேன். அதிலிருந்து நீங்கள் எவ்வளவு கடினமான சல்லடைகளை வைத்து சலித்தாலும் நீங்கள் அடைக்க முற்படுகிற 91-க்கு முந்தைய பாடல்களின் வரிசையில் கண்டிப்பாக சேரும். ஒருவித முன்முடிவுகளோடு ராஜாவை அணுகினால் அவர்கள் இதுபோன்ற விவாதங்களில் பலவிதமான சப்பைக்கட்டுகளைத்தான் கடைசி வரைக்கும் நம்பியிருக்கணும். வேறு வழியில்லை.
இதெல்லாம் ராஜா-ரகுமான் இசைக்காலங்களை ஓவர்லாப்பிங் இல்லாமல் வைத்துக்கொள்ளும் அணுகுமுறை. கடைத்தெடுத்த ஹிப்போகிரசித்தனம். 'தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து' ராஜா.
அவரை எம்.எஸ்.வி, ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களோடு ஏணி வரிசையில் வைத்து நிறுவுவதும் ஒருவித பக்குவமில்லாமையே. ஏனென்றால் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தின் இசைக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமாக்களிலிருந்து வேறெந்த இசையமைப்பாளரை ஒப்புமைக்காக கொண்டுவர முடியும்?
மொதல்ல ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இசையமைக்கும் போக்கில் 76 முதல் 80/81 வரை, 82 முதல் 89 வரை, 90-98 வரை, 99 முதல் இன்றுவரை என ராஜா பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் முன்ன பின்ன வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ராஜா தொடர்ந்து பின்னணி இசைக்கோர்ப்புகளில் முடிந்தவரை தான் முன்பு வந்த பாதையையே முழுவதுமாக மாற்றி மாற்றி பயணித்துக் கொண்டு இருக்கிறார். ஒருவர் ராஜாவின் 80s பாடல்கள் மட்டுமே புடிக்கும் என்றால் அவர்களின் கேட்கும் அனுபவம் தேங்கிவிட்டது என பொருள். ராஜாவின் 90களின், 2000களின் பாடல்கள் தொடர்ந்து மக்களால் கேட்கப்படுகிறது என்பதே எல்லாரும் பிரமிக்கும் வகையிலான மகத்தான சாதனை.
Last edited by venkkiram; 30th July 2016 at 02:54 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
30th July 2016, 05:41 AM
#8
Junior Member
Regular Hubber
மறுபடியும் மொதலேர்ந்தா? யாருங்க 91 என்பதை மைல்கல்லாக வச்சது? யாருங்கிறேன்?
அது தான் என் முதல் பதிவிலேயே சொன்னேனே. ராஜாவின் படைப்பு திறன் என்னை பொறுத்தவரை குறையவில்லைதான். ஆனால் அதற்கான வர்த்தக ரீதியான மதிப்பு குறைந்தது என்பது நிதர்சனமான உண்மை. இது ரஹ்மான் வந்ததால் இருக்கலாம். அல்லது பொதுவான இசை ரசனை மாறியதால் இருக்கலாம். அல்லது இரண்டுமே இருக்கலாம். ராஜாவின் ஆரம்பகால படைப்புகளில் இருந்து அவரது பிந்தைய படங்களின் இசை வெகுவாக மாறவில்லை. இதனால் அவரது படைப்புத்திறன் குறைந்தது என்று அர்த்தமில்லை. அவரே பல இடங்களில் வெகு ஜன ரசிகர்கள் கேட்கும் இசை இப்போது சரியில்லை என்று அங்கலாய்த்தார். ஆனால் வெகுஜன ரசனை மாற ஆரம்பித்தது. வெகு ஜன ரசனைக்கு ஏற்றவாறு தனது இசையமைப்பை மாற்றுவது தான் அறிந்த இசைக்கு செய்யும் அவமரியாதை என்று ராஜா கருதி இருக்கலாம். இது இரு தரப்பின் தவறும் இல்லை. ஆனால் இதனால் வெகு ஜன இசையை தாழ்த்தி பேசுவது கடைந்தெடுத்த திமிர்தனம். இதை ராஜா சொன்னால் பரவாயில்லை. ஏன் என்றால் அவர் ஒரு மேதை. ஆனால் அவரது ரசிகர் என்பதாலேயே தன்னையும் ஒரு அதிமேதாவி என்று நினைத்து கொள்பவர்கள் கூறுவது நல்ல வேடிக்கை. அவர்களது அகங்காரத்தையும் அறிவீனத்தையும் தான் இது வெளிப்படுத்துகிறது.
Bookmarks