-
21st March 2017, 10:05 PM
#11
Junior Member
Regular Hubber
இராஜ்சேகர் அவர்கள் கூறுவது முற்றிலும் சரி. இரஹ்மான் வந்த பிறகு தான் இசையமைப்பாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இசை உரிமை பற்றிய புரிதல் உண்டானது. ஒரு படத்திற்கு இசையமைத்து அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் ஒரு இசையமைப்பாளர் அந்த பட அதிபருக்கு அவர் படத்தில் அந்த இசையை பயன்படுத்த அனுமதி தருகிறார். ஆனால் அந்த இசை என்ற அறிவுப் பொருள் (ஐ.பி) அதை உருவாக்கிய இசையமைப்பாளருக்கே சொந்தமானது. பாடலாசிரியர், பாடகர்கள், இசை கருவி வல்லுனர்கள், ஒலி பொறியாளர் அனைவரும் ஒரு பாடலுக்காக உழைத்தாலும், ஒரு இசையமைப்பாளர் இல்லாமல் அந்த பாடலே இல்லை. அவரது அறிவின் மூலம் உருவான இசைக்கு அவரே சொந்தக்காரர். இராஜா மட்டும் இதை முன்பே செய்திருந்தால் அவர் பெரும் செல்வந்தர் ஆகியிருப்பார். இதை ஒரு முறை இரஹ்மானே கூறினார். என்ன காரணமோ இராஜாவிற்கு அதன் மேல் ஆர்வம் இல்லை. நான் முன்பே கூறியது போல இப்போது கூட இதை செய்வது கார்த்திக் இராஜாவாக இருக்கலாம். அது உண்மையாக இருந்தாலும் அவரை நான் குறை கூறவில்லை. அவர் செய்வது முற்றிலும் சரியே.
ஏன் இதை எஸ்.பி.பியின் ஐம்பதாவது ஆண்டு விழாவின் போது கொண்டு வர வேண்டும் என்றால், அவர் இப்போது தான் இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு இசை நிகழ்ச்சி நடத்துகிறார். விளம்பரம் செய்பவர்கள் எஸ்.பி.பியின் ஐம்பதாவது ஆண்டு என்று கூறி கல்லா கட்டுகின்றனர். அதில் ஒரு பகுதியை நியாயப்படி இராஜாவிற்கு கொடுப்பதில் என்ன பிரச்சனை?
எஸ்.பி.பியின் ஐம்பத்தி ஓராம் ஆண்டு என்று கூறி அடுத்த ஆண்டு விளம்பரம் செய்தார்கள் என்றால், அப்போதும் கூட இந்த பிரச்சனை வந்திருக்கும். என்னவோ எஸ்.பி.பியின் ஐம்பதாவது ஆண்டில் பிரச்சனை செய்ய வேண்டும் என்றே செய்வது போல் அல்லவா இருக்கிறது சிலர் கூறுவது.
-
21st March 2017 10:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks