-
12th November 2009, 06:17 AM
#1211
Senior Member
Regular Hubber
Eagle, I was not trying or in any way mean to say that his compositions not being liked by today's youth is important. We folks and most of us hubbers here are very influenced by his earlier works spanning the last 25 years or more.. ( it's hard not to !! when you have 850+ movies ) - And people like me are biased or heavily convinced of his genius and that awe might stop me from evaluating his product objectively.. ) So if the youth today ( that is why i quoted someone who are in their early 20's ) would not have that bias mostly as they probably grew up with other more commercially popular MDs in the last 10-15 years. Plus the song sounded youthful - So if they like it, it is a testimony that he can provide songs that are liked by today's generation who have not heard his countless songs from the late 70's onwards.
Hope that clears it..
Cheers
MSK
-
12th November 2009 06:17 AM
# ADS
Circuit advertisement
-
12th November 2009, 10:32 AM
#1212
Senior Member
Seasoned Hubber
'Mausam' nu padam 2009 list irundhadhe I remember someone brought it up saying Pankaj Kapoor's film nu, but we later decided that its 'Happi' indeed. (Directed by Bhavana, Pankaj acts in it)
But, I read a Shahid Kapoor's interview in which he said his dad is directing a film called 'Mausam'.
-
12th November 2009, 12:32 PM
#1213
Senior Member
Seasoned Hubber
Looks like Kamal and IR are going to sing "Ninaivo" and "indha minminikku" songs respectively for the remake of "Sigappu Rojaakkal".
http://www.behindwoods.com/tamil-mov...-12-11-09.html
I am wondering how Yuvan is going to present these songs i.e. as is (tune and orchestration) or something different? No idea.
thanks,
Krishnan
-
12th November 2009, 01:02 PM
#1214
Senior Member
Devoted Hubber
mausam song "paa"
http://ishare.rediff.com/video/Entertainment/Exclusive!-Gumsum----new-song-from-Amitabhs-Paa/865986
-
12th November 2009, 02:30 PM
#1215
Senior Member
Veteran Hubber
Aaha marupadiyuma
-
12th November 2009, 02:45 PM
#1216
Senior Member
Senior Hubber
Gum Sum song is a trendy rehash of "Thumbi Vaa" or the very famous "Mood in Kaapi".
Just 7 notes behold a beauty of life...
-
12th November 2009, 02:50 PM
#1217
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
raagas
Gum Sum song is a trendy rehash of "Thumbi Vaa" or the very famous "Mood in Kaapi".
Why again?
-
12th November 2009, 03:04 PM
#1218
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
venkkiram
read from Orkut IR group..
---------------------------------------
ஒரு காது வழி செய்தி :
பா படத்தில் ''சங்கத்தில் பாடாத கவிதை'' மற்றும் ''புத்தம் புது காலை பொன்னிற'' பாடல்கள் புது பாடல்களாக வரும் என்று நம்பக தகுந்த வட்டாரத்தின் வழியாக என்காதுக்கு வந்துள்ளது. மற்ற 3 பாடல்கள் எல்லாம் புதிய பாடல்கள்.
--------------------------
Wish this news to be true.
Idhu uNmai dhaan pola! :P
-
12th November 2009, 05:13 PM
#1219
http://mathimaran.wordpress.com/2009/03/18/article-177/
இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + தீராநதி அவதூறுகள்
18
03
2009
தில்லை நடராஜன் மீது தீராத பத்தி கொண்டு இந்து மத அபிமானியாக அப்பாவியாக வாழ்ந்தவர் நந்தனார். இருந்தும், `தீண்டப்படாதவர் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதவர் ஆயினர்? என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர், முதல் பக்கத்திலேயே பின்வருமாறு அறிவிக்கிறார்:
`தீண்டப்படாதவரிடையே பிறந்து நமது பக்தியாலும், ஒழுக்க நலன்களாலும் அனைவரின் பெருமதிப்பைப் பெற்று புகழ்மிகு திருவருட்செல்வர்களாகத் திகழ்ந்த -நந்தனார், ரவிதாஸ், சொக்கமேளர் ஆகிய மூவர் நினைவுக்கு உரிமையாக்கப்பட்டது.
புகழ்பெற்ற நடிகையும், பாடகியுமான கே.பி. சுந்தராம்பாள், சத்தியமூர்த்தி அய்யரோடு சேர்ந்து கொண்டு தந்தை பெரியாரையும், அவரது இயக்கத்தையும் மேடைதோறும் ஏறி திட்டித் தீர்த்தவர்; காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தவர். அப்படியிருந்தும் பார்ப்பனப் பத்திரிகைகள், அவரது ஜாதியைக் குறிப்பிட்டுக் கேவலமாக எழுதியபோது, அதைக் கடுமையாகக் கண்டித்து, கே.பி.சுந்தராம்பாளை ஆதரித்தவர் பெரியார்.
இதுதான் பெரியார்-அம்பேத்கரின் சமூக நீதி அரசியலின் அடிப்படை. இந்த அடிப்படையில்தான், இளையராஜா பற்றிய டாக்டர் குணசேகரனின் விமர்சனக் கட்டுரையை தலித் முரசு வெளியிட மறுத்தது. இது சமூக நீதி அரசியலின் பால பாடம்.
ஆனால், இசை குறித்தும் எனக்குத் தெரியும் என்கிற தொனியில் இனி இளையராஜா எப்படி இசையமைக்க வேண்டும் என்று சொல்லுமளவிற்கு அ.மார்க்சின் அறியாமை, தீராநதி கட்டுரையில் கொடிகட்டிப் பறந்தது. கூடவே திரித்தலும், பொய்த்தகவல்ககளும் இணையாகப் பறந்தன.
எடுத்துக் காட்டாக, `வேதம் புதிது போன்ற படங்களில் அவரின் சிறந்த திரை இசைகள் பல சமஸ்கிருத சுலோசங்களோடு குழைந்து வெளிப்பட்டதை மறந்து விட இயலுமா? இவற்றைக் கேட்கிற செவிகளுனூடாக ஏற்படுகிற உணர்வலைகள் எத்தன்மையானவை?` என்கிறார் அ.மார்க்ஸ்.
1. `வேதம் புதிது படத்தின் கதையமைப்புக்கு அப்படித்தான் இசையமைக்க வேண்டும். (கல்லூரி பாடத்திட்டம் பிற்போக்குத் தனமாக இருக்கிறது; அதை நான் போதிக்க மாட்டேன் என்று எந்த முற்போக்குப் பேராசிரியரும் முரண்டு பிடிப்பதில்லை.)
2. அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா அல்ல. தேவேந்திரன்.
கட்டுரையின் இன்னொரு இடத்தில், `நாட்டுப்புற இசையைக் கூட அவர் சாஸ்திரியப் படுத்துகிறார். `பாடறியேன்
படிபப்றியேன்
எனத் தொடங்கி மரி மரி நின்னே என முடியும் அவரது புகழ் பெற்ற திரை இசை என்கிறார் அ. மார்க்ஸ்.
இளையராஜா மீதான இந்த அவதூறு அப்பட்டமான திரித்தலினால் வருவது. பாடறியேன்
படிப்பறியேன்.. என்கிற நாட்டுப்புறப் பாடலில் இருந்துதான் உங்களின் சாருமதி ராகம் வந்தது என்பதைதான் மரி மரி நின்னே
வில் அவர் நிரூபித்தார்.
தாழ்த்தப்பட்டவர், நிறைந்த பக்தியோடு கோயிலின் கருவறைக்குள் நுழைந்து, கடவுள் மீது கை வைக்க ஆசைப்பட்டது மாதிரி, மிகவும் புனிதமானது கர்நாடக சங்கீதம், தெய்வாம்சம் பொருந்தியது, அதில் ஒரு திருத்தம் கூட செய்யக் கூடாது? என்று சனாதனவாதிகள் கொண்டாடிய அதே வார்த்தைகளோடும், அதே பக்தியோடும் உள்ளே சென்று, அந்தப் புனிதத்தில் கை வைத்து இதில் புனிதமும் இல்லை, புண்ணாக்கும் இல்லை என்று தன் இசையால் அந்தப் புனிதத்தை நடுத்தெருவில் போட்டுடைத்தார் இளையராஜா.
மரி மரி நின்னே
இந்தக் கீர்த்தனையை தியாகய்யர் காம்போதி ராகத்தில்தான் இயற்றி இருந்தார். ஆனால், இளையராஜா தன் அசாத்தியமான, துணிச்சலான இசைத் திறமையால், காம்போதியில் இருந்து மரி மரி நின்னே
என்ற வார்த்தைகளை மட்டும் உருவி சாருமதியில் தான் உருவாக்கிய ராகத்தில் இட்டு நிரப்பினார்.
ஆம், தியாகய்யரையே மெட்டுக்குப் பாட்டெழுத வைத்தவர் இளையராஜா. சனாதன ஆதரவாளர் என்று சொல்லப்படும் இளையராஜாவின் இந்தச் செயலுக்கு, அவரைக் கொலை செய்யும் அளவுக்கு கோபத்தில் இருந்தனர் சனாதனவாதிகள் என்பது, சனாதன எதிர்ப்பாளரான அ.மார்க்சுக்கு எப்படித் தெரியாமல் போனது?
(உண்மையான பக்தியோட கோயிலுக்குள் நுழைய முயற்சித்த நந்தனைத்தானே கொளுத்தினார்கள். ஆம், நந்தன் தன்னை அறியாமலே செய்த கலகம் அது.)
***
எஸ்.என்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், இப்படி எல்லா இசையமைப்பாளர்களும் திரை இசைப் பாடலை கர்நாடக சங்கீத அடிப்படையில் தான் அமைத்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இளையராஜாவும் அதைச் செய்தார்.
மேற்சொன்ன அனைவரும் கர்நாடக இசை மரபுக்குள்ளேயே அடக்கி வாசித்தவர்கள். இளையராஜா ஒருவர்தான் திமிறி நின்றவர்.
அது மட்டுமின்றி, தோடி, காம்போதி போன்றவை மிகக் கடினமான, உயரிய ராகங்கள். அதை மிக எளிமையாக எவனாலும் கையாள முடியாது என்ற மிரட்டலோடு இறுமார்ந்த கூட்டத்தைக் கேலி செய்வதுபோல் அந்த ராகங்களை மிகச் சாதாரணமாகக் கையாண்டு அதில், பம்பை, உடுக்கை, பறை போன்ற தமிழ் இசைக் கருவிகளை மிக அதிக அளவில் பயன்படுத்தி, அந்த ராகங்களின் புனிதத்தைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தவர் இளையராஜா. இந்த கலகத்தை அவர் திட்டமிட்டுச் செய்யவில்லை. அவர் இசை அறிவின் இயல்பான உணர்வு அது.
எடுத்துக்காட்டாக, எல்லாம் இன்பமயம் படத்தில், `மாம(ன்) ஊடு மச்சு ஊடு என்ற கானாப் பாடலை, மோகனமும்+சங்கராபரணமும் கலந்த பிலஹரி ராகத்தில் அமைத்திருப்பார்.
ஆரோகணம் - ச ரி க ப த ச்
அவரோகணம் - ச நி த ப ம க ரி ச
(ஸ்வர ஜதி இதன் சாகித்தியம் ரா ர வேணு கோபாலா)
இவைகளோடு அந்தப் பாடலின் மய்யமாக ஓடுவது, `வெஸ்டர்ன் கிளாசிக்கல். இவை எல்லாவற்றையும் விட அந்தப் பாடலை ஆக்கிரமிக்கும் வாத்தியக் கருவிகள் எவை தெரியுமா? உறுமியும், பறையும்.
ஆம், யாரும் தொட அஞ்சுகிற இந்தக் கடினமான ராகத்தை மாம(ன்) ஊடு மச்சு ஊடு
என்று சேரிகளில் இருந்து ஒலிபெருக்கி மூலமாக மச்சு வீட்டு சங்கீத வித்வான் காதில் விழுந்த போது, அவரின் புனிதம் எப்படி பொல பொலத்துப் போனது என்று அ.மார்க்சுக்கு தெரியுமா? இது போல் நிறைய எடுத்துக் காட்டுகளைச் சொல்ல முடியும். கர்நாடக இசையில் இனி புதிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு அதைச் சக்கையாக்கி வீசியவர் இளையராஜா ஒருவர்தான்.
ஆம், அவர் மேற்கத்திய இசையில் நின்று கொண்டுதான் கர்நாடக இசையைக் குனிந்து பார்க்கிறார். அதனால் தான் அவர் உலகின் தலை சிறந்த கலைஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
கர்நாடக இசையின் உச்சத்தைச் சென்று அதை உலுக்கிய பிறகும், இளையராஜாவை சாஸ்திரிய இசை மேதைகள் புகழ்கிறார்கள் என்றால், இளையாரஜாவை, வம்புக்காகவாவது அவரது இசை குறித்து அவதூறு சொன்னால், தனக்கு இசை பற்றி தெரியாது என்று ஆகிவிடுமோ என்கிற பயமே காரணம். உண்மை இப்படி இருக்க, `சனாதன இசையில் இளையாராஜா காணாமல் போய்விட்டார் என்பது கற்பனை மட்டுமல்ல, பித்தலாட்டமும் கூட.
`மணியே, மணிக்குயிலே
(நாடோடித் தென்றல்) என்கிற பாடல் பின்னுக்குச் சென்று ரஹ்மானின் `சின்னச் சின்ன ஆசை (ரோஜா) முன்னுக்கு வந்தது. ரசிக மதிப்பீட்டில் ராஜாவின் வீழ்ச்சி இப்படியாக வெளிப்பட்டது. உண்மையிலேயே ஒரு புயலாக ரஹ்மானின் பிரவேசம் அரங்கேறியது என்கிறார் அ.மார்க்ஸ்.
`சின்னச் சின்ன ஆசையோடு `மணியே மணிக்குயிலே பாடலை ஒப்பிடுவதே அபத்தம். மிக அற்புதமான உணர்வுகளைத் தரக்கூடிய உன்னதமான பாடல் `மணியே மணிக்குயிலே. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் `ரோஜா திரைப்படம் அளவிற்கு ஓடவில்லை என்பதால், `சின்னச் சின்ன ஆசை அளவிற்கு `மணியே மணிக்குயிலே.. பிரபலமாகவில்லை.
ஒரு பாடலின் வெற்றி என்பது, பிரபலமாவதில் மட்டுமில்லை. அப்படிப் பார்த்தால், தமிழ் நாட்டின் மிகப் பெரிய அறிவாளி ரஜினிகாந்தாகத்தான் இருப்பார்.
`சின்னச் சின்ன ஆசை
பாடலை ரஹ்மான், அ.மார்க்ஸ் விரும்புவது போல் ஜாஸ், புநூஸ், நாட்டுப்புறப் பாடல்கள் சாயலில் அமைக்கவில்லை. `ஹரி கம்போதி என்கிற சாஸ்திரிய சங்கீத அடிப்படையில்தான் அமைத்தார். வீணையும், கஞ்சீராவும் அதில் முக்கியமான கருவிகள். இதைத்தான் ஒரு புயலாக ரஹ்மானின் பிரவேசம் அரங்கேறியது என்கிறார் அ.மார்க்ஸ்.
இளையராஜாவிற்கு எதிராக ரஹ்மானை நிறுத்துவது, இளையராஜாவிற்கு எதிராக தேவாவை ஒப்பிடுவது என்பது ஒரு இசை ஒப்பீடாக இல்லை. (அவருடன் ஒப்பிடுவதற்கு இங்கு ஒருவரும் இல்லை) அ.மார்க்சின் இந்த ஒப்பீட்டில் அரசியல் இருக்கிறது.
அந்தக் காலத்தில், டாக்டர் அம்பேத்காருக்கு எதிராக எம்.சி.ராஜாவை நிறுத்திய தொனியிலேயே இளையராஜாவுக்கு எதிராக தேவா.
இந்தக் காலத்தில், டாக்டர் கே.ஆர்.நாராயணனுக்கு எதிராக அப்துல் கலாமை நிறுத்திய தொனியிலேயே இளையராஜாவுக்கு எதிராக ரஹ்மான். இந்த அரசியல்தான் அ.மார்க்சின் ஒப்பீட்டில் ஒளிந்திருக்கிறது.
இதை நிரூபிப்பது போல், உலகத் தரத்துக்கு ஒப்பிட்டுச் சொல்லத் தக்க அளவில் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் முதலானோர் இசைக் கட்டுமானங்கள் அமைத்து அவற்றை வெகுசனப்படுத்தினர் என்கிறார் அ.மார்க்ஸ்.
உண்மையில் ரஹ்மான் என்கிற புயல், தமிழ் மக்களின் மனதில் இசைப் புழுதியை வாரி இரைத்துவிட்டு கரை கடந்து போய் அய்ந்தாண்டுகளுக்கு மேலாகிறது. இந்த அய்ந்தாண்டில் ஒரு பாடல் கூட பிரபலமாகவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் என்பவர், நான்கு படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருக்கிறார். அதில் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் பிரபலம் (வசீகரா)
உண்மை இப்படியிருக்க, இவர்களை `உலகத்தரத்துக்கு என்று பொய் சொல்கிறார்.
அ.மார்க்சே ஒரு ஒப்பீட்டை உண்டாக்குகிறார். அந்த ஒப்பீட்டிலும் அவர் நேர்மையாக இல்லை. இன்றைய திரை இசை நிலையில் வியாபார ரீதியாகவும், வெற்றி பெற்று நிறைய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜாதான் (இளையராஜாவின் மகன்.) அதன் பிறகு வித்யாசாகர். நிலைமை இப்படியிருக்க மறந்து ஓரிடத்தில் கூட, யுவன் சங்கர் ராஜாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஏன்?
இளையராஜாவின் பரம்பரையின் மீதே கோபமா?
ஜெ.பிஸ்மியின் தமிழ் சினிமாவில்.. என்ற புத்தகத்திற்கான முன்னுரையில் அ.மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்;
யோசித்துப் பார்க்கும்போது இச்சைகளின் ஓட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த வகையில் தமிழ்த் திரைப்படங்கள் பாசிசத்திற்கு, பாசிசக்கட்டமைப்பிற்கு எதிரான ஒரு பாணியைத் தம்மை அறியாமலேயே நிறைவேற்றி வந்துள்ளது என்று சொல்லத் தோன்றுகிறது
கவுண்டமணி செந்தில் நகைச்சுவையையும் கூட நாம் இந்த நோக்கில் பரிசீலிக்கும்போது வேறுவிதமான முடிவுகளுக்கு வர முடியும். காலங்காலமாக இங்கே பதிக்கப்பட்டுள்ள பல்வேறு மதிப்பீடுகளையும், பிம்பங்களையும், அவர்கள் தலை கீழாக்கிக் கவிழ்த்து நொறுக்குவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகவே எனக்குப் படுகிறது.
`இட்லர், பாசிசத்திற்கு எதிரானவர் என்பதுபோல் தமிழ்த் திரைப்படங்கள் பாசிசத்திற்கு எதிரானது என்கிறார் அ.மார்க்ஸ்.
பெண்களை, உடல் ஊனமுற்றவர்களைப் படுகேவலமாக கேலி செய்து, சண்டாளப் பயலே `அட சண்டாளா என்று தலித் மக்களை இழிவுபடுத்துகிற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிற கவுண்டமணி செந்திலை அதையெல்லாம் தாண்டி, பல்வேறு மதிப்பீடுகளையும், பிம்பங்களையும் அவர்கள் தலைகீழாக்கிக் கவிழ்த்து நொறுக்குகிறார்கள் என்கிற அ.மார்க்ஸ் தான், இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அ.மார்க்ஸ் உட்பட பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கான தகுதி, திறமைக்கான இந்திய உதாரணம் மட்டுமல்ல இளையராஜா; மூன்றாம் நாடுகளில் முகம் அவர்.
பின்குறிப்பு: யாரையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக நிறுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான ஒன்று. யாரையும் விமர்சனத்திற்குத் தகுதியற்றவர்களாக நிறுத்துவது இன்னும் மோசமான ஒன்று. விமர்சன அறிவு என்பது ஒரு மனித மாண்புஎன்று கட்டுரையில் தலித் முரசுக்கு அறிவுரை சொல்கிறார் அ.மார்க்ஸ்.
அதனால் அவரைப் பற்றியான இந்த விமர்சனங்களுக்கும் இதே அளவுகோலைப் பொருத்திப் பார்ப்பார் என்று நம்புகிறோம்.
-வே. மதிமாறன்
-
12th November 2009, 07:30 PM
#1220
Senior Member
Veteran Hubber
Originally Posted by
raagas
Gum Sum song is a trendy rehash of "Thumbi Vaa" or the very famous "Mood in Kaapi".
Balki - mosadi idhu - it has already been used once in Balu mahendra's "aur ek prem kahani" - what the heck ??? as an
IR fan cudnt he have persuaded IR to come up with a fresh number ??
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
Bookmarks