Ragam:Todi --------- Thiruarutpa

மாற்றறியாத செழும் பசும் பொன்னே,
மாணிக்கமே, சுடர் வண்ணக் கொழுந்தே,
கூற்று அறியாத பெருந்தவர் உள்ளக்
கோயில் இருந்த குணப்பெருங் குன்றே,
வேற்றறியாத சிற்றம்பலக் கனியே,
விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே,
சாற்றறியாத என் சாற்றுங் களித்தாய்
தனி நடராஜ என் சற்குரு மணியே.