பூவைப் பூ வண்ணா.. அப்படின்னு திருப்பாவைல வரும்..அதற்குப் பொழிப்புரை எழுதறச்சே ரொம்ப சிரம்ப்பட்டுட்டேன்.. பூவைப் பூ- பூக்காத பூ அப்படின்னு நிறைய பொழிப்புரைல்ல எழுதியிருந்தாங்க..பூக்காத பூன்னா மொட்டு..கண்ணா மொட்டாவா இருக்கான்..இல்லியே..
அப்புறம் எம் ஏ வேங்கடகிருஷ்ணனோட வியாக்கியானம்.. பூவைப் பூ..ன்னா காயாம் பூ என்ற ஒரு அர்த்தம்.. அது இருப்பது சற்றே நீல நிறம்!
Bookmarks